< Back
மாநில செய்திகள்
வியாபாரி திடீர் சாவு
விருதுநகர்
மாநில செய்திகள்

வியாபாரி திடீர் சாவு

தினத்தந்தி
|
1 Sep 2023 9:59 PM GMT

இரும்பு வியாபாரி திடீரென இறந்தார்.

தாயில்பட்டி,

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கங்கணாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரியாஸ் (வயது 41). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள இ.ரெட்டியபட்டி கிராமத்தில் பழைய இரும்பு வாங்குவதற்காக வந்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது இப்ராஹிம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்