< Back
மாநில செய்திகள்
கோவில் கோபுர கலசத்தை திருடியவர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

கோவில் கோபுர கலசத்தை திருடியவர் கைது

தினத்தந்தி
|
18 Dec 2022 9:06 PM GMT

கோவில் கோபுர கலசத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

லால்குடி:

லால்குடி அருகே வழுதியூர் கிராமத்தில் உள்ள வடக்கு அய்யன் வாய்க்கால் கரையில் பிடாரி பரிபூரண பூரணத்து அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கோபுரத்தில் இருந்த ஐம்பொன்னாலான கலசம் நேற்று முன்தினம் இரவு திருட்டு போனது. மறுநாள் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், கோபுரத்தில் கலசம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து கிராம மக்கள் லால்குடி ேபாலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், வழுதியூர் காலனி தெருவை சேர்ந்த தனபாலனின் மகன் சோபன்பாபு(வயது 22) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கோபுர கலசத்தை திருடியது அவர்தான் என்பது தெரியவந்தது. இது குறித்து லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து சோபன்பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்