< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
ஜல்லிக்கட்டு காளை முட்டி விவசாயி படுகாயம்
|16 Dec 2022 7:07 PM GMT
ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு காளை முட்டி விவசாயி படுகாயம் அடைந்தார்.
ஆலங்குடி அருகே உள்ள எஸ்.களபம் ஊராட்சியை சேர்ந்தவர் கணேசன் (வயது 59). விவசாயியான இவர் ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வந்தார். நேற்று வீட்டின் அருகே வயலில் மேய்ந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டு காளையை அவிழ்க்க சென்றபோது கணேசனின் இடதுபுற மார்பில் கொம்பால் குத்தி தூக்கி வீசியது. இதில், படுகாயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.