< Back
மாநில செய்திகள்
விபத்தில் காயமடைந்த வெல்டர் சாவு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

விபத்தில் காயமடைந்த வெல்டர் சாவு

தினத்தந்தி
|
25 Sep 2023 6:53 PM GMT

விபத்தில் காயமடைந்த வெல்டர் இறந்தார்.

விராலிமலை தாலுகா, சாமி ஊரணிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் பாக்கியராஜ் (வயது 36). வெல்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அதே ஊரை சேர்ந்த பாலமுத்து (35) என்பவரும், பாக்கியராஜூம் தென்னலூரில் நடந்த ஒரு விருந்துக்கு சென்று விட்டு மீண்டும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். பாலமுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்ல பாக்யராஜ் பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது விராலிமலை-கீரனூர் சாலையில் பேராம்பூர் அருகே சென்றபோது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்களை அப்பகுதியினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பாக்கியராஜ் மட்டும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியராஜ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்