< Back
மாநில செய்திகள்
விபத்தில் காயமடைந்த வாலிபர் சாவு
தென்காசி
மாநில செய்திகள்

விபத்தில் காயமடைந்த வாலிபர் சாவு

தினத்தந்தி
|
29 Jun 2023 6:45 PM GMT

வாசுதேவநல்லூரில் விபத்தில் காயமடைந்த வாலிபர் இறந்தார்.

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே உள்ள ராமநாதபுரம் செம்புலிங்க சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 36). இவரும், திருமலாபுரத்தை சேர்ந்த குருசாமி என்பவரும் கடந்த 23-ந் தேதி இரவில் மோட்டார் சைக்கிளில் வாசுதேவநல்லூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

வாசுதேவநல்லூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் அருகே சென்றபோது சாலையோரம் இருந்த வேப்பமரத்தின் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் குருசாமி லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். முனியாண்டி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியாண்டி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்