< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது

தினத்தந்தி
|
4 Sep 2023 6:45 PM GMT

தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் இசக்கிமுத்துக்குமார் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று வழிபாடு செய்ய பிரத்யேகமாக தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை களிமண், மாவு போன்ற இயற்கை சார்ந்த பொருட்களில் மட்டுமே தயாரிக்க வேண்டும். இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சுற்றுச்சூழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை மீறி பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் விநாயகர் சிலைகளை செய்து விற்பனை செய்து வருகின்றனர். இவை விநாயகர் சதுர்த்தி விஜர்சனத்துக்கு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இதனால் நீர் மாசு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்