< Back
மாநில செய்திகள்
அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை 16-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
விழுப்புரம்
மாநில செய்திகள்

அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை 16-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
12 Aug 2023 6:45 PM GMT

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை 16-ந் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டது.

விழுப்புரம்

தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 5 பேர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி. ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். மேலும் இவ்வழக்கின் புகார்தாரரான அப்போதைய வானூர் தாசில்தாராக இருந்தவரும் தற்போது அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவருமான குமாரபாலன் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை. அவரிடம் விசாரணை நடத்துவதற்காக இவ்வழக்கின் விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் அவர் ஆஜராகும்படியும் நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்