< Back
மாநில செய்திகள்
தூக்குப்போட்ட வாலிபர் சாவு
கரூர்
மாநில செய்திகள்

தூக்குப்போட்ட வாலிபர் சாவு

தினத்தந்தி
|
18 Sep 2023 6:13 PM GMT

தூக்குப்போட்ட வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள அழகம்பட்டியை சேர்ந்தவர் மணிவேல் (வயது 30). க.பரமத்தி அருகே உள்ள அத்திப்பாளையத்தில் உள்ள ஒரு கிரசரில் பொக்லைன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இதனால் மணிவேல் தனது மனைவி முருகேஷ்வரியுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இந்தநிலையில் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை மணிவேல் குடித்து விட்டு வந்து, மனைவியுடன் தகராறில் ஈடுட்டார். இந்தநிலையில் மணிவேல் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்