< Back
மாநில செய்திகள்
தூக்குப்போட்ட தொழிலாளி சாவு
கரூர்
மாநில செய்திகள்

தூக்குப்போட்ட தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
26 Aug 2023 6:10 PM GMT

தூக்குப்போட்ட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கரூர் மண்மங்கலம் அருகே உள்ள சோமூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 54).தொழிலாளியான இவர், இவர் தீராத வயிற்று வலியால் அவதி அடைந்து வந்துள்ளார். இதற்காக கடந்த 6 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும், வயிற்று வலி குணமாக வில்லையாம். இதனால் மனமுடைந்த ஜெகதீஸ்வரன் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ஜெகதீஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்