< Back
மாநில செய்திகள்
காவலாளி பரிதாப சாவு
தேனி
மாநில செய்திகள்

காவலாளி பரிதாப சாவு

தினத்தந்தி
|
12 April 2023 7:00 PM GMT

தேனி அருகே மொபட் மீது கார் மோதியதில் காவலாளி பரிதாபமாக இறந்தார்.

தேனி அருகே கோபாலபுரம் ஒண்டிவீரன் நகரை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 68). இவர் தேனி தொழிற்பேட்டையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், அரண்மனைப்புதூர் பகுதியில் தனது மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, எதிரே ஆண்டிப்பட்டி தங்கம்மாள்புரத்தை சேர்ந்த பாலமுருகன் (41) ஓட்டி வந்த கார், மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் பரமசிவம் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கார் டிரைவர் பாலமுருகன் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்