< Back
மாநில செய்திகள்
கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் சாவு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் சாவு

தினத்தந்தி
|
30 April 2023 6:45 PM GMT

கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் இறந்தார்.

தொண்டி,

திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி(வயது 40). இவர் நேற்று முன்தினம் அதிகாலை கடலில் மீன் பிடிப்பதற்காக படகு ஒன்றில் தனியாக சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் தொண்டி கடற்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதை தொடர்ந்து கடற்கரை போலீசார், கிராம மக்கள் உதவியுடன் மாயமான மீனவரை தேடி வந்தனர். இந்நிலையில் மீனவர் ராஜீவ் காந்தி சென்ற படகு முள்ளி முனை கிராமத்தின் அருகே உள்ள காரங்காடு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் தேடிப்பார்த்தபோது ராஜீவ் காந்தி பிணமாக மிதந்தார். உடனே உடலை கைப்பற்றிய போலீசார் திருவாடானை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தொண்டி கடற்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்