< Back
மாநில செய்திகள்
மகனை கட்டையால் அடித்துக்கொன்ற தந்தை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மகனை கட்டையால் அடித்துக்கொன்ற தந்தை

தினத்தந்தி
|
23 May 2022 6:44 PM GMT

திருமயம் அருகே மகனை கட்டையால் அடித்துக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்.

திருமயம்:

தகராறு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே தேக்காட்டூர் குறிச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துபிறவி. இவரது மகன் குமரேசன் (வயது 30). இவருக்கும் இவரது மனைவி பிரதீபாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில், குமரேசன் அதே பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் குமரேசனுக்கும், அவரது தந்தை முத்துபிறவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 19-ந் தேதி தந்தை-மகனுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

மகன் அடித்துக்கொலை

இதில் ஆத்திரமடைந்த முத்துபிறவி கட்டையால் குமரேசனை சரமாரியாக அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரேசன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துபிறவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்