< Back
மாநில செய்திகள்
சிறுபாக்கம் அருகே    டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி
கடலூர்
மாநில செய்திகள்

சிறுபாக்கம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி

தினத்தந்தி
|
19 Dec 2022 6:45 PM GMT

சிறுபாக்கம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலியானாா்.


சிறுபாக்கம்,

சிறுபாக்கம் அருகே கச்சிமயிலூர் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 41). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை நடவு பணிக்காக தனது வயலில் இரும்பு சக்கரம் பொருத்தப்பட்ட டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் டிராக்டர் இரும்பு சக்கரத்தில் அவர் சிக்கினார். இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிறுபாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்