< Back
மாநில செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி சாவு

தினத்தந்தி
|
3 Aug 2023 7:50 PM GMT

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலியானார்.

பெரம்பலூர் அருகே சோமண்டாபுதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பச்சமுத்து (வயது 50), விவசாயி. இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், அன்புமணி, பார்த்தி ஆகிய 2 மகன்களும் உள்ளனர். பச்சமுத்து நேற்று முன்தினம் மாலை வீட்டில் உள்ளவர்களிடம் மாடுகளுக்கு தீவனம் வயலில் இருந்து எடுத்து வருவதாக கூறி விட்டு சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் இரவு 8 மணியளவில் அவரது வயலில் உள்ள கிணற்றின் அருகே பச்சமுத்துவின் காலணி கிடந்தது. இதனைக்கண்ட உறவினர்கள் பச்சமுத்து கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம்? என்ற சந்தேகத்தில் இதுகுறித்து உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பச்சமுத்துவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கிணற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த பச்சமுத்துவின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் பெரம்பலூர் போலீசார் பச்சமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்