< Back
மாநில செய்திகள்
நாளை மறுநாள் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

நாளை மறுநாள் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தினத்தந்தி
|
27 Sep 2022 6:06 PM GMT

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூரில் நாளை மறுநாள் நடக்கிறது.

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடப்பிரியா தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், கடன் உதவிகள், வேளாண் இடுபொருட்கள், வேளாண் எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதால், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் இதில் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்