< Back
மாநில செய்திகள்
தடுப்பு சுவரில் மோதி கார் தீப்பிடித்து எரிந்தது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தடுப்பு சுவரில் மோதி கார் தீப்பிடித்து எரிந்தது

தினத்தந்தி
|
7 Feb 2023 6:45 PM GMT

தியாகதுருகம் அருகே தடுப்பு சுவரில் மோதி கார் தீப்பிடித்து எரிந்தது

கண்டாச்சிமங்கலம்

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் முத்தையன் மகன் திலீபன் செல்வகுமார் (வயது 32). அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ள இவர் நிறுவனத்தின் வேலை சம்பந்தமாக சென்னையில் இருந்து காரில் கோவைக்கு புறப்பட்டு சென்றார். வேலை முடிந்ததும் அங்கிருந்து மீண்டும் காரில் சென்னைக்கு புறப்பட்டார். காரை திலீபன் செல்வகுமாரே ஓட்டினார்.

தியாகதுருகம் அருகே உள்ள வாழவந்தான்குப்பம் கிராமத்தில் வந்தபாது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த திலீபன் செல்வகுமார் கார் கதவை அவசர அவரசமாக திறந்து கொண்டு வெளியே ஓடினார். பின்னர் தீ மளமளவென கார் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதுபற்றி உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தியாகதுருகம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள்முற்றிலும் எரிந்து சேதமடைந்த கார் எலும்பு கூடாக காட்சி அளித்தது. இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்