< Back
மாநில செய்திகள்
தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
விருதுநகர்
மாநில செய்திகள்

தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

தினத்தந்தி
|
20 Sep 2023 8:40 PM GMT

தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

சிவகாசி,

திருத்தங்கல்-ஆலமரத்துப்பட்டி ரோட்டில் உள்ள பசும்பொன்நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் பேச்சிமுத்து (வயது 32). இவருக்கும் ராஜேஸ்வரி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் பேச்சிமுத்துவுக்கு கடன் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டின் அருகில் உள்ள ரேஷன் கடை முன்பு உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் தீக்காயம் அடைந்த அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்