< Back
மாநில செய்திகள்
ஊட்டியில் 124-வது மலர் கண்காட்சி நாளை தொடக்கம்
மாநில செய்திகள்

ஊட்டியில் 124-வது மலர் கண்காட்சி நாளை தொடக்கம்

தினத்தந்தி
|
19 May 2022 3:09 PM GMT

நாளை தொடங்கி 5 நாட்கள் ஊட்டி மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நாளை தொடங்க இருக்கும் 124-வது மலர் கண்காட்சிக்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாளை தொடங்கி 5 நாட்கள் இந்த மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனைக்கான லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையொட்டி பூங்காவில் நடவு செய்யப்பட்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்ச்செடிகளில் பல வண்ணங்களிலான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. சுமார் 35 ஆயிரம் மலர்த்தொட்டிகளை அலங்கார மேடைகளில் அடுக்கும் பணிகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் அமித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்