< Back
மாநில செய்திகள்
தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
தென்காசி
மாநில செய்திகள்

தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

தினத்தந்தி
|
21 Aug 2023 6:45 PM GMT

தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகானந்தம், வழங்கல் அலுவலர் (பொறுப்பு) நடராஜன், வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட 347 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்