< Back
மாநில செய்திகள்
பரமத்திவேலூரில்  ரூ.88 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்
நாமக்கல்
மாநில செய்திகள்

பரமத்திவேலூரில் ரூ.88 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

தினத்தந்தி
|
20 Sep 2022 6:45 PM GMT

பரமத்திவேலூரில் ரூ.88 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 552 கிலோ தேங்காய்களை ‌விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.23.59-க்கும், குறைந்தபட்சமாக ரூ.19.29-க்கும், சராசரியாக ரூ.23.00-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 946-க்கு ஏலம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ‌ஏலத்திற்கு 3 ஆயிரத்து 794 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.24.80-க்கும், குறைந்தபட்சமாக ரூ.20.35-க்கும், சராசரியாக ரூ.‌23-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.88 ஆயிரத்து 271-க்கு தேங்காய் ஏலம் போனது.

மேலும் செய்திகள்