< Back
மாநில செய்திகள்
ராசிபுரத்தில்  ரூ.23 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
நாமக்கல்
மாநில செய்திகள்

ராசிபுரத்தில் ரூ.23 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

தினத்தந்தி
|
25 Aug 2022 5:22 PM GMT

ராசிபுரத்தில் ரூ.23 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே பவர்ஹவுஸ் பின்புறம் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்க கிளை வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் 674 பருத்தி மூட்டைகள் ரூ.23 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. அதன்படி ஆர்.சி.எச். ரக பருத்தி 502 மூட்டைகளும், சுரபி ரக பருத்தி 128 மூட்டைகளும், கொட்டு பருத்தி 44 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டிருந்தன.

இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.8,669-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.11,444-க்கும், சுரபி ரக பருத்தி குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.9169, அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.11,339-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.3,599 முதல் அதிகபட்சமாக ரூ.6,887-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்