< Back
மாநில செய்திகள்
ராசிபுரத்தில்  ரூ.47 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
நாமக்கல்
மாநில செய்திகள்

ராசிபுரத்தில் ரூ.47 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

தினத்தந்தி
|
22 Aug 2022 5:02 PM GMT

ராசிபுரத்தில் ரூ.47 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

ராசிபுரம்:

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் அக்கரைபட்டியில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. மல்லசமுத்திரம், வையப்பமலை, பெரிய மணலி, சின்ன மணலி, மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, மின்னாம்பள்ளி, சவுதாபுரம், நாட்டாமங்கலம், எலச்சிபாளையம், கோக்கலை உள்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். சேலம், ஆத்தூர், ராசிபுரம், அவினாசி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை எடுத்தனர். இதில் 1,371 சுரபி ரக பருத்தி மூட்டைகள் ரூ.47 லட்சத்திற்கு ஏலம் போனது. சுரபி ரக பருத்தி குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.9899-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.12350-க்கும் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்