< Back
மாநில செய்திகள்
பரமத்திவேலூரில்  ரூ.21 லட்சத்து 42 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
நாமக்கல்
மாநில செய்திகள்

பரமத்திவேலூரில் ரூ.21 லட்சத்து 42 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

தினத்தந்தி
|
19 Aug 2022 4:23 PM GMT

பரமத்திவேலூரில் ரூ.21 லட்சத்து 42 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 22 ஆயிரத்து 618 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.84.55-க்கும், குறைந்தபட்சமாக ரூ.64.99-க்கும்‌, சராசரியாக ரூ.84.89-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.17 லட்சத்து 75 ஆயிரத்து 152-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று நடந்த ஏலத்திற்கு ‌26 ஆயிரத்து 862 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.83.45-க்கும், குறைந்தபட்சமாக ரூ.63.19-க்கும், சராசரியாக ரூ.83.19-க்கும் விற்பனை ஆனது. மொத்தம் ரூ.21 லட்சத்து 42 ஆயிரத்து 921-க்கு தேங்காய் பருப்பு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்