< Back
மாநில செய்திகள்
பரமத்திவேலூரில்  ரூ.16 லட்சத்து 9 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
நாமக்கல்
மாநில செய்திகள்

பரமத்திவேலூரில் ரூ.16 லட்சத்து 9 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

தினத்தந்தி
|
14 July 2022 4:10 PM GMT

பரமத்திவேலூரில் ரூ.16 லட்சத்து 9 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 17 ஆயிரத்து 283 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.19-க்கும், குறைந்தபட்சமாக ரூ.69.70-க்கும்‌, சராசரியாக ரூ.80.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.13 லட்சத்து 27 ஆயிரத்து 439-க்கு ஏலம் நடந்தது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு ‌19 ஆயிரத்து 967 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.87.20-க்கும், குறைந்தபட்சமாக ரூ.69.69-க்கும், சராசரியாக ரூ.86.90-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.16 லட்சத்து 9 ஆயிரத்து 297-க்கு ஏலம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்