< Back
மாநில செய்திகள்
பரமத்திவேலூரில்  ரூ.13 லட்சத்து 73 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
நாமக்கல்
மாநில செய்திகள்

பரமத்திவேலூரில் ரூ.13 லட்சத்து 73 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

தினத்தந்தி
|
23 Jun 2022 1:37 PM GMT

பரமத்திவேலூரில் ரூ.13 லட்சத்து 73 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 17 ஆயிரத்து 674 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.88-க்கும், குறைந்தபட்சமாக ரூ.66.89-க்கும்‌, சராசரியாக ரூ.86.89-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.15 லட்சத்து 3 ஆயிரத்து 560-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று நடந்த ஏலத்திற்கு ‌16 ஆயிரத்து 906 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.87.59-க்கும், குறைந்தபட்சமாக ரூ.69.69-க்கும், சராசரியாக ரூ.84.19-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.13 லட்சத்து 73 ஆயிரத்து 26-க்கு தேங்காய் பருப்பு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்