நாமக்கல்
பரமத்திவேலூரில் ரூ.15 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
|பரமத்திவேலூரில் ரூ.15 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் தேங்காய் பருப்பு ஏலம் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 15 ஆயிரத்து 310 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.85.49-க்கும், குறைந்தபட்சமாக ரூ.69.89-க்கும், சராசரியாக ரூ.85.39-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.12 லட்சத்து 35 ஆயிரத்து 802-க்கு விற்பனை நடந்தது.
இதேபோல் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 17 ஆயிரத்து 674 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.88 க்கும், குறைந்தபட்சமாக ரூ.66.89-க்கும், சராசரியாக ரூ.86.89-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.15 லட்சத்து 3 ஆயிரத்து 560-க்கு தேங்காய் பருப்பு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.