< Back
மாநில செய்திகள்
பரமத்திவேலூரில்  ரூ.9 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
நாமக்கல்
மாநில செய்திகள்

பரமத்திவேலூரில் ரூ.9 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

தினத்தந்தி
|
19 May 2022 1:58 PM GMT

பரமத்திவேலூரில் ரூ.9 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 14 ஆயிரத்து 429 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.88.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ.72.25-க்கும்‌, சராசரியாக ரூ.85.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.11 லட்சத்து 82 ஆயிரத்து 455-க்கு வர்த்தகம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு ‌11 ஆயிரத்து 191 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.85.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.62.99-க்கும், சராசரியாக ரூ.84.89-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.9 லட்சத்து ஆயிரத்து 310-க்கு ஏலம் போனது. தேங்காய் பருப்பின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்