< Back
மாநில செய்திகள்
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்காலிக பணி நீக்கம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்காலிக பணி நீக்கம்

தினத்தந்தி
|
1 Jun 2023 6:45 PM GMT

கொலை வழக்கில் சரிவர தகவல் தராத சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்காலிக பணி நீக்கம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

விழுப்புரம்

மரக்காணம் அருகே உள்ள அனிச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த விமல்ராஜ் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். முன்னதாக இந்த சம்பவத்தில் இருதரப்பினருக்கும் இடையே உள்ள பிரச்சினையை குறிப்பிட்டு ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது என எச்சரிக்கை தகவல் தராமல் அலட்சியமாக செயல்பட்டதாக கோட்டக்குப்பம் தனிப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்