< Back
மாநில செய்திகள்
புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
திருவாரூர்
மாநில செய்திகள்

புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
15 Oct 2022 6:45 PM GMT

நீடாமங்கலம் பகுதி கோவில்களில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் அருகே உள்ள திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைமுன்னிட்டு 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதைப்போல நீடாமங்கலம் வீரஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

மேலும் செய்திகள்