< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
வெளிப்பாளையம் முச்சந்தி காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
|9 April 2023 7:00 PM GMT
வெளிப்பாளையம் முச்சந்தி காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
நாகை வெளிப்பாளையம் முச்சந்தி காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த 31-ந்தேதி பால்காவடி நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.