< Back
மாநில செய்திகள்
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வேதபாராயணம் நிகழ்ச்சி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வேதபாராயணம் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
18 Feb 2023 6:45 PM GMT

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வேதபாராயணம் நிகழ்ச்சி நடந்தது.

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் வேதங்கள் பூஜித்த தலமாகும். இங்கு மாசி மக உற்சவம் தொடங்கி நடந்து வருகிறது. இதை முன்னிட்டு ரிக், யஜுர், சாம வேத பாராயணம் நிகழ்ச்சிகள் தொடங்கியது. முரளிதர சுவாமிகளின் சார்பில் சிவ ஆகம வேத விற்பன்னர்களான புருஷோத்தமன், பிரபு கனபாடிகள் தலைமையிலான குழுவினர் வேத பாராயணத்தை தொடங்கினர். வருகிற 24-ந் தேதி வரை கோவிலில் மணவாள சுவாமி சன்னதி எதிரில் ரிக், வேத பாராயணமும், 25-ந் தேதி முதல் அடுத்த மாதம் (மார்ச்) 4-ந் தேதி வரை யஜூர் வேத பாராயணமும், 5-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை சாம வேத பாராயணமும் நடக்கிறது.

மேலும் செய்திகள்