< Back
மாநில செய்திகள்
குருபரிகார கோவிலில் சிறப்பு வழிபாடு
திருவாரூர்
மாநில செய்திகள்

குருபரிகார கோவிலில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
20 Oct 2022 6:45 PM GMT

குருபரிகார கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவில், நவக்கிரக தலங்களில் குருபகவானுக்குரிய கோவிலாகும். இங்கு நேற்று குருவார வழிபாடு நடந்தது. இதையொட்டி கலங்காமற் காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது. உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை வழிபட்டனர். இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

மேலும் செய்திகள்