< Back
மாநில செய்திகள்
வடபத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டியாகம்
திருவாரூர்
மாநில செய்திகள்

வடபத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டியாகம்

தினத்தந்தி
|
9 Oct 2022 6:45 PM GMT

வடபத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டியாகம் நடந்தது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே நாலாங்கட்டளையில் உள்ள வடபத்ர காளியம்மன் கோவிலில் குடமுழுக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) நடந்தது. அதைத்தொடர்ந்து மண்டலாபிஷேக பூஜைகள் நடந்து வந்தன. இதையொட்டி நேற்று அம்மனுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக செருகுடி கார்த்திகேய சிவாச்சாரியார் தலைமையில் 21 சிவாச்சாரியார்கள் கலந்து கொண்ட யாக பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் நவசண்டி யாகம் நடந்தது. இதையொட்டி 10அடி ஆழம் 7 அடி அகலம் கொண்ட யாக குண்டம் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்