< Back
மாநில செய்திகள்
யானை வாகனத்தில் பெருமாள் அருள்பாலித்தார்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

யானை வாகனத்தில் பெருமாள் அருள்பாலித்தார்

தினத்தந்தி
|
3 Oct 2022 7:00 PM GMT

ஆண்டு திருவிழாவையொட்டி யானை வாகனத்தில் பெருமாள் அருள்பாலித்தார்

சீர்காழி அருகே உள்ள அண்ணன் பெருமாள் கோவில் கிராமத்தில் அண்ணன் பெருமாள் கோவில் உள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதிக்கு இவர் அண்ணன் என்பதால் அண்ணன் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். தென் திருப்பதி என்றும் இந்த கோவில் அழைக்கப்படுகிறது. மிகவும் பிரசித்திப்பெற்ற இந்த கோவிலின் ஆண்டு திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. நேற்று பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்