< Back
மாநில செய்திகள்
வாள்நெடுங்கண்ணி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

வாள்நெடுங்கண்ணி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

தினத்தந்தி
|
7 Aug 2022 4:46 PM GMT

வாள்நெடுங்கண்ணி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

திருக்கடையூர் அருகே ஆக்கூரில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வாள்நெடுங்கண்ணி தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதத்தையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக தான்தோன்றீஸ்வரர் மற்றும் வாள் நெடுங்கண்ணி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், குங்குமம், மஞ்சள்பொடி, திரவியபொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர். இதேபோல் மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர் கோவிலில் உள்ள கவுமாரி துர்கா பரமேஸ்வரி சன்னதியில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.

மேலும் செய்திகள்