< Back
மாநில செய்திகள்
3 கோவில்களில் தீமிதி விழா
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

3 கோவில்களில் தீமிதி விழா

தினத்தந்தி
|
7 Aug 2022 4:38 PM GMT

3 கோவில்களில் தீமிதி விழா நடந்தது.

திருவெண்காடு மகாமாரியம்மன் கோவிலில் தீமிதி விழா நடைபெற்றது. விழாவையொட்டி மணிகர்ணிகை ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் பால் காவடி உள்ளிட்ட காவடிகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் கோவில் வாசலில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். இதேபோல் செம்பனார்கோவில் அருகே புஞ்சை கிராமத்தில் உள்ள ஆலடி மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது. விழாவையொட்டி காவேரி ஆற்றங்கரையில் இருந்து கரகம், காவடிகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து கோவிலின் வாசலில் அமைக்கப்பட்டுள்ள தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவெண்காடு அருகே திருக்குறளூர் கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் கோவில் வாசலில் அமைக்கப்பட்டுள்ள தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் செய்திகள்