< Back
மாநில செய்திகள்
மகா மாரியம்மன் கோவிலில் 108 பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

மகா மாரியம்மன் கோவிலில் 108 பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு

தினத்தந்தி
|
6 Aug 2022 4:46 PM GMT

மகா மாரியம்மன் கோவிலில் 108 பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு நடந்தது.

சீர்காழி தென்பாதி மெயின் ரோட்டில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று முன்தினம் 108 பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். முன்னதாக அம்மனுக்கு 108 இளநீர், பன்னீர், பால், மாம்பழம், வடை, லட்டு, தாலி சரடு, மஞ்சள், குங்குமம், தேன், தாமரைப்பூ, ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகா மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து கோவில் பிரகாரத்தில் அம்மன் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்