< Back
மாநில செய்திகள்
தீர்த்தவாரி நிகழ்ச்சி
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

தீர்த்தவாரி நிகழ்ச்சி

தினத்தந்தி
|
3 Aug 2022 4:56 PM GMT

தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

செம்பனார்கோவில் அருகே விளநகர் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான துறைகாட்டும் வள்ளலார் கோவில் உள்ளது. பிரசித்திப் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு அன்று தீர்த்தவாரி நடைபெறும். அதன்படி ஆடிப்பெருக்கை யொட்டி தீர்த்தவாரி நடந்தது. முன்னதாக துறைகாட்டும் வள்ளலார் சாமிக்கும், வேயுறு தோளியம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவ அம்மன் வீதியுலா வந்து காவிரி ஆற்றங்கரைக்கு எழுந்தருளினார்.அப்போது காவிரி படித்துறையில் கலசபூஜையும், அஸ்திர தேவருக்கு மஞ்சள் பொடி, திரவிய பொடி, பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகமும் நடைபெற்றுது. இதையடுத்து உலக நன்மைக்காகவும், இயற்கை இடர்பாடுகள் குறைய வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது. பின்னர் தீர்த்தவாரி நடந்தது. இதில் சிவனடியார்கள், சக்தி வழிபாட்டு மன்றத்தினர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்