< Back
மாநில செய்திகள்
பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு
திருவாரூர்
மாநில செய்திகள்

பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
24 July 2022 4:55 PM GMT

பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

நீடாமங்கலம் அருகே பூவனூரில் சதுரங்கவல்லபநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நவக்கிரக தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் எழுந்தருளி உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரணியர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது.

மேலும் செய்திகள்