< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
குதிரை வாகனத்தில் மாரியம்மன் வீதி உலா
|21 July 2022 3:40 PM GMT
குதிரை வாகனத்தில் மாரியம்மன் வீதி உலா நடந்தது.
வாய்மேடு அருகே சிந்தாமணிகாடு பகுதியில் வேம்படி மாரியம்மன் கோவலில் ஆடி திருவிழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பக்தர்கள் மாவிளக்கு போடுதல், அர்ச்சனை செய்தல், காவடி, பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகிறார்கள். தொடர்ந்து குதிரை வாகனத்தில் மாரியம்மன் வீதிலா நடந்தது. பின்னர் மஞ்சள் விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.