< Back
மாநில செய்திகள்
வேம்படி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

வேம்படி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா

தினத்தந்தி
|
19 July 2022 5:01 PM GMT

வேம்படி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்தது.

நாகை மாவட்டம் வாய்மேடு சிந்தாமணிகாடு கிராமத்தில் உள்ள வேம்படி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், திருநீறு, தேன் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாரியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்