< Back
மாநில செய்திகள்
கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு
திருவாரூர்
மாநில செய்திகள்

கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
28 Jun 2022 4:36 PM GMT

கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.

நீடாமங்கலம் அருகே உள்ள நரிக்குடி எமனேஸ்வரர் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. முன்னதாக கோவில் திருக்குளத்தில் பக்தர்கள் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் அங்காளபரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அமாவாசை வழிபாடு நடந்தது. இதில் அங்காளபரமேஸ்வரிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள்பொடி உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்