< Back
மாநில செய்திகள்
ருத்ர கோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
திருவாரூர்
மாநில செய்திகள்

ருத்ர கோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

தினத்தந்தி
|
26 Jun 2022 3:48 PM GMT

ருத்ர கோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ருத்ர கோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் ருத்ரகோடீஸ்வரர், நந்தி பகவானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள்பொடி உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் இன்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்திகேஸ்வரருக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திரவியப்பொடி, தயிர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. இதையடுத்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்