< Back
மாநில செய்திகள்
கீரம்பூர் அருகேசாய்பாபா கோவிலில் வருடாபிஷேக விழா
நாமக்கல்
மாநில செய்திகள்

கீரம்பூர் அருகேசாய்பாபா கோவிலில் வருடாபிஷேக விழா

தினத்தந்தி
|
21 Aug 2023 7:00 PM GMT

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே தொட்டிப்பட்டியில் உள்ள சாய்பாபா கோவிலில் 9-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு மேல் சாய்பாபாவிற்கு சிறப்பு ஆரத்தியும், 5 மணிக்கு கலசங்களுடன் யாக பூஜையும், 6 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசங்களுடன் புறப்பட்டு கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் கலசாபிஷேகம் செய்தனர்.

பின்னர் காலை 7 மணிக்கு சர்வசித்தி தனாகர்சன சங்கல்ப பூஜையும், 8 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தொட்டிப்பட்டி சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்