< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பரமத்திவேலூர் சுற்றுவட்டார சிவன் கோவில்களில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை - பக்தர்கள் சாமி தரிசனம்
|20 July 2022 3:47 PM GMT
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.
பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர்,பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோயில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் மற்றும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.