< Back
மாநில செய்திகள்
திருவெண்ணெய்நல்லூர் அருகே    வாகனம் மோதி வாலிபர் பலி
விழுப்புரம்
மாநில செய்திகள்

திருவெண்ணெய்நல்லூர் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி

தினத்தந்தி
|
21 Sep 2023 6:45 PM GMT

திருவெண்ணெய்நல்லூர் அருகே வாகனம் மோதி வாலிபர் பலியானார்.

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மகன் சேஷாத்ரி (வயது 30). விழுப்புரத்தில் உள்ள ஒரு சலூன் கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருடைய வீட்டுக்கு சென்னையில் இருந்து உறவினர்களான சாந்தி, சரோஜினி ஆகியோர் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் நேற்று அதிகாலை சென்னைக்கு புறப்பட்டனர். அப்போது சாந்தி தனது செல்போனை மறந்து சேஷாத்ரி வீட்டில் வைத்து விட்டு சென்று விட்டார். விழுப்புரம் அருகே சென்ற சாந்தி, சேஷாத்ரியை தொடா்பு கொண்டு வீட்டில் உள்ள தனது செல்போனை எடுத்துக் கொண்டு விக்கிரவாண்டி சுங்கச்சாவடிக்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து சேஷாத்ரி சாந்தியின் செல்போனை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் விக்கிரவாண்டி நோக்கி புறப்பட்டார். திருவெண்ணெய்நல்லூர் அடுத்த திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பேரங்கியூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சேஷாத்ரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்