< Back
மாநில செய்திகள்
கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
சேலம்
மாநில செய்திகள்

கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
14 July 2023 6:45 PM GMT

கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

சேலம் மணக்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 30). இவர் பூ தோரணம் கட்டும் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதே பகுதியில் உள்ள சென்னியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஹரிகரசுதன் (வயது 30), சதீஷ்குமார் (34), செந்தில்முருகன் (32), அன்வர் (32) ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதில் ஹரிகரசுதன் ஆத்திரமடைந்து சுப்பிரமணியை கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி கொலை முயற்சி வழக்கில் ஹரிகரசுதன், சதீஷ்குமார், செந்தில்முருகன், அன்வர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஜூடிசியல் 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது. இதனிடையே செந்தில்முருகன் என்பவர் இறந்து விட்டார். இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் ஹரிகர சுதனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு தீர்ப்பளித்தார்.சதீஷ்குமார், அன்வர் ஆகியோர்விடு விக்கப் பட்டனர்.

மேலும் செய்திகள்