< Back
மாநில செய்திகள்
விபத்தில் வாலிபர் சாவு
ஈரோடு
மாநில செய்திகள்

விபத்தில் வாலிபர் சாவு

தினத்தந்தி
|
14 Aug 2023 12:13 AM GMT

விபத்தில் வாலிபர் இறந்தாா்.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை வேடிச்சி வீதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 28). வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு நெரிஞ்சிப்பேட்டையில் இருந்து பூனாச்சிக்கு மோட்டார்சைக்கிளில் தனது நண்பர்களான நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த கேசவன் (24) பாரதி (19) ஆகியோருடன் சென்று கொண்டிருந்தார். அந்தியூர் ரோட்டில் அம்மாபேட்டையை அடுத்து செலம்பனூர் பிரிவு அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார்சைக்கிளும், மணிகண்டனின் மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மணிகண்டன் படுகாயம் அடைந்தார். மற்ற 2 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். உடனே அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்