< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

தினத்தந்தி
|
23 Aug 2022 5:36 PM GMT

திருக்கோவிலூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள மாடாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் அரவிந்தன்(வயது 26). இவர் அதே ஊரில் மோட்டார் வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று அரவிந்தன் வாட்டர் ஸ்பிரே மூலம் மோட்டார் சைக்கிளை கழுவிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கடையின் மேல் சென்ற மின் கம்பியில் தண்ணீர் பட்டதால் அதன் வழியாக அரவிந்தன் மீது மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அரவிந்தன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருப்பாலபந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்