< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு

தினத்தந்தி
|
28 Jun 2023 6:58 PM GMT

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

கீரனூர் அருகே குன்றாண்டார் கோவிலை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவரது மகன் முருகானந்தம் (வயது 36). இவர் தனது மோட்டார் சைக்கிளில் குன்றாண்டார் கோவிலில் இருந்து கீரனூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்து சென்றது. இதில் நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் நிலைதடுமாறி முருகானந்தம் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகானந்தம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்